Friday, February 16, 2007

"நொய்டா"

அரசாங்கம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா ?
நிர்வாகம் இருக்கிறதா?
நீதித்துறை இருக்கிறதா?

வீதிக்கு வந்த குழந்தைகள்,
வீட்டிற்குத்திரும்பவில்லை!
நூற்றுக்கணக்கில்!

புகார் அளித்தார்.
வாங்கவில்லை
காவல்துறை,

விரட்டியடித்தார்
பெற்றோர்களை!

சோகம்,துயரம்
தொடர்ந்தது,
புகைமூட்டம் போல்!

விம்மினார்,விசும்பினார்,
விடியவில்லை!

சாய்க்கடையில்,
கழிவுநீர்
போக்கில்,

மனிதப்பிஞ்சுகள்
குவியல்,குவியலாக!

இதயம் கனத்தது!!

No comments: