Wednesday, February 21, 2007

கலிங்கா...!

உன்னை வெறுத்து
'அசோகன்'
தன் பாதை மாறினான்.
'தம்மம்'
வெளிச்சம் காட்டியது.

அவன் 'சக்கரம்'
அரியணை ஏறியது.
விடுதலை வேள்விக்குப்பின்,
'தம்மம்' பறைசாற்றிட,

'வளர்ச்சியை எதிர்த்த
பழங்குடியினர்!'
போரை வெறுத்த பூமியில்,
வேரோடு சாய்ந்தனர்,
துப்பாக்கி குண்டுகளுக்கு.

'அ(ரசு)தர்மம்
அசோகரின் பூமியில்!'

No comments: