Thursday, March 1, 2007

தேங்காய்த்திட்டு இராமானுசம்

புதுவைக்கு புகழ் சேர்த்திட்ட
புகழ் மணியே!

இடது சாரி இயக்கத்தின்
இன்றியமையா தலைமையே!

தத்துவ தடுமாற்றங்கள்
உம்மை தடுமாற வைக்கவில்லை!

தனிமைப் படுத்தப்பட்டாலும்,
தனி முயற்சியில்.

தள்ளாட்டம் காணாது!
நிலை மாற்றம் கண்டாய்!
நின்ற இடத்திற்கு பெருமை
சேர்த்தாய்!

சட்டமன்ற பதவி உம்மை
சறுக்கி விடவில்லை!
சிந்தனையை குறுக்கி விடவில்லை!

அரிய நகர் பொறுப்பை
உதறினாய்!
அரசியல் தனிப் பிரிவின்
காரணமாக!

பதவியை துறந்து
பண்பை நிறுவினாய்!

தனியார் தொழிற்சாலைகளில்,
தொழிலாளர் உரிமை காத்திட,
தகுமிகு 'தொழிற்சங்க ஐக்கியம்'
கண்டாய்!

இணைப்பு எதிர்ப்பு
போராட்டத்தில் இளைஞனாய்!
முன்னோடியாய்!
இந்திய அரசிடம் வாதம்
தொடுத்தாய்!
புதுவையின் தனித்தன்மை
காத்தாய்!
பலருக்கு அரசியல் வாழ்வளித்தாய்!

மத்திய அரசு தாமாக
அளித்திட்ட
பட்டயமும், விருதையும்,
தாமதமாக ஏற்றாய்!


தியாகம் விற்பனைச் சரக்கல்ல,
வியாபார பொருளல்ல,
என்றாய்!

சான்று அளிப்பதில்
கறாராய், எவரிடமும்
நடந்து கொண்டாய்!

இடது சாரிகளே வெளிப்படையாய்
ஆதரிக்க தயங்கிய காலத்தில்,
ஈழப்போராட்டத்தை ஆதரித்து
முழங்கினாய்!
ஒடுக்கு முறை வடிவம்
எவ்வகையாயினும்!

அடக்கு முறை அநியாயம்
அன்னிய தேசத்தில் ஆயினும்!
கண்ணியம் காத்திட
வாழ்வுரிமை நிலைத்திட,
ஒருமைப்பாடு ஆதரவு
ஓங்கி ஒலித்தாய்!

ஒத்த கருத்தாளர்களுடன்
ஓடி உழைத்தாய்!
இன்னொரு பரிமாணம்
வெளிப்படுத்தினாய்!
ஓய்விலா உழைப்பில்
சமூக நிலை உயர்த்த
உரத்து சிந்தித்தாய்!


மாற்றுக் கருத்துக்களுடன்
மோதிக் களித்தாய்!
மார்க்சிய, மாவோயிச
வளர்ச்சிப் போக்கின்
மகத்துவம் போற்றிக் களித்தாய்!


'விடுதலை வரலாறு'
புதுவையில் உம்மை
இருட்டடிப்பு செய்த போதும்,
உண்மையும் எண்ணெயும் போல்
வெளிப்பட்டாய்
இறுதியில்!


2 comments:

Unknown said...

Hi
Really its a good poem. I like poems. Sorry to write the comments in english. Excellent poem and good blog.
Please also visit www.indopopular.com . They have several useful information for Indians.

சுந்தரவடிவேல் said...

//...உம்மை
இருட்டடிப்பு செய்த போதும்//
It will be great if you could tell us these stories in detail (urainadai).
Thank you!