Friday, March 9, 2007

வாக்கு மூலம்..!

ஒதுக்கீடு அரசியல்,
ஓயாமல் பேசினேன்!


"அறைகூவல் கல்வி மையத்தில்"
அன்று,
ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி
அறிந்து,


சமூக நீதிக்காக,ஆர்த்தெழுந்த,
மண்ணின் மைந்தர்கள்,
89 களில் இருந்து பரப்புரை,
நடத்திய கூட்டமைப்பினர்!
நல்லவர்கள்!


உணர்வின்றி,விழிப்பின்றி,
அவர் உறங்கிய வேளை,
வந்தேறினேன்! வளத்திற்காக!
எம் மக்கள் நலத்திற்காக!


அரவணைத்தார் என்னை!
நேர் மறை உணர்வுடன்,
உள்ளீடு அறியாமல்,
உயர்த்தினர் என்னை!
அமைப்பாளர் ஆனேன்!


உள் ஒதுக்கீடு என்றதும்,
உள்ளதும் போகும் என்றேன்!
உள்ளூர் மக்கள்,
ஒற்றுமை உடைத்தேன்!
ஊதியம் அடைந்தேன்!


உழைத்தவர் எவரும்
இல்லை,
பேரவையில் இன்று!


"பிரித்தாளும் பிரித்தானியர்"
தோற்றார்,
எம் முன்னே!

No comments: