Wednesday, March 14, 2007

'பக்ரைன்' தமிழர்கள்!

உள்ளூரில் வறட்சி. விவசாயம் கை கொடுக்கவில்லை. பாறை பூமியில் பாடு பட்டாலும் பலன் இல்லை. அதிகம் படிக்கவில்லை. அடுப்பு எரிய ஏதாவது உழைப்பு. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. அறிந்தவர்,தெரிந்தவர் மூலம் அண்டை மாநிலத்தில்-கேரளா, சண்டிகார்- போன்ற பகுதிகளில், சாலைகள் செப்பனிடும் வேலைக்குச் சென்றுள்ளார்.


அங்கு கிடைத்த அறிமுகம், விவரத்தின் அடிப்படையில், பக்ரைனுக்கு பயணம். கந்து வட்டிக்கு கடன் வாங்கி உரு.1.50 இலட்சம் முதல் உரு.2 இலட்சம் வரை செலவழித்து, வாழ்க்கையை நகர்த்திட முடிவு செய்து, கொத்தனார், சித்தாள் வேலை செய்து வந்தனர்.


கொட்டடியில் அடைத்து வைப்பது போல், சிறு அறைக்குள் 50 அல்லது 60பேர் , கொட்டி வைத்த கற்கள் போல் திணிக்கப்பட்டதின் விளைவு, மின் கசிவு, தீ விபத்து. அதில் இருந்து தப்பிக்க இயலாது, மூச்சுத் திணறி இறந்தனர்.


பிழைக்கச் சென்ற இடத்திலும் சோகம் துரத்தியடித்து இவர்களின் வாழ்க்கை கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வாங்கிய கடனும் தீரவில்லை, வாழ்க்கைக் கடனும் தீரவில்லை. மனைவி, பிள்ளைகள், பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், என அனைவரையும் மீளாத சோகத்தில் விட்டுச் சென்றனர், பிழைக்கச் சென்ற தமிழர்கள். சுதந்திர இந்தியாவின் 60வது கொண்டாட்ட சமயத்தில் ஏற்பட்ட கோலம்! அவலம்!


தமிழ் நாடு இவர்களுக்கும் சொந்தம் தான்!!

No comments: