Saturday, March 17, 2007

"பள்ளாங்குழி"

'பள்ளாங்குழி' போன்ற விளையாட்டு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடிகளிடம், குறிப்பாக, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நிலப்பகுதியில் வசித்தவர்களிடமும், 'சுலு' போன்ற பழங்குடி மக்களிடமும் இருந்துள்ளது, குறித்த செய்தி, அறிய வருகிறது. பண்டையத் தமிழ் நாட்டில், ஏன் புதுவையில் கூட, சிறுபிள்ளைகளாக நாம் இருந்தபோது பல்வேறு வடிவங்களில் வேலைப்பாடுகளுடன், மீன் வடிவத்தில், பள்ளாங்குழி விளையாட்டு இருந்து வந்துள்ளது. இதில் விளையாட புளியங் கொட்டைகள் காய்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


கணக்குப் பார்த்து விளையாடும் கலையை, பெரியவர்கள், குறிப்பாக பெண்கள், வீடுதோறும் ஒழிவு நேரங்களில், உணவுக்குப் பின், பிற்பகல் வேளைகளில், விழாக் காலங்களில் குழுவாக விளையாடுவது. இந்த குழியில் இருந்து எடுத்தால், அடுத்தவர் குழியை துடைத்து விட முடியும் என்பது எல்லாம் கணிதத்துடன் தொடர்புடையது.


இக்கலை, அறிவு சார்ந்த தமிழ் மக்களின் விளயாட்டுகளில் ஒன்று என்றால் வியப்பில்லை. தற்போது, 'லூடோ' போன்ற விளையாட்டுகள், 'அபகசு', 'உசிமசு' 'சுகொடா' விளம்பரங்கள், "அறிவுப் பயிற்சி", என்றெல்லாம் தற்போது கூறுவது, பணம் பறிப்பது, வணிகமயத்தின் விரைவான கொடுஞ்சூழலே எனில் மிகையன்று.

No comments: