Thursday, March 22, 2007

அந்தோ மக்கள்!

ஆள் காட்டும் வர்க்கம்!
அதிகார வர்க்கம்!
ஆள் காட்டி, விரல் அசைவிற்கு,
ஆட்டம் போடும் கூட்டம்!
அந்நியனே தாழ்வில்லை என உணர்த்தும்,
அடிக்கடி.


அடுத்த நாட்டை ஆள்கிறோம்,
அநியாயம், அதிகம் செய்கிறோம்.
இனியாவது நியாயம்,
இதயத்தின் ஓரத்தில் துளிர்த்தது.


நம்மவர், அவரையும் விஞ்சுகிறார்.
நாடகம் தோற்கும், அரங்கேற்றம்.
போட்ட வேடத்திற்கு பொருத்தமாக,
பொதுமக்களை வஞ்சிக்கிறார்.


"பொது மக்கள் விசாரணை",
மூன்றாம் மாடியில்,
"குளு குளு" அரங்கில்.
காவல் துறை பாதுகாப்பில்.
தடுப்பரண்கள் மத்தியில்.


குழப்பம் விளைவிக்க,
குண்டர் படை உதவியுடன்,
சட்ட மன்ற உறுப்பினர்
தலைமையில்,
ஆளூம் வர்க்க ஆசியுடன்,


தனியார்மய முதலாளியை,
தூக்கி நிறுத்த, அரசும், அதிகாரமும்,
ஆர்ப்பரிக்கும்.
ஆவலுடன், காவலுடன்.


அந்தோ மக்கள்!!

No comments: