Saturday, March 17, 2007

மெய்மையே!

உனைக் காண ஏங்கும்,
மன விழிகள் உறங்காது!
இமை மூடி இறுகினாலும்,
பிம்ப ஒளிக்கீற்றுகள்,
நுண் துகள்களாய்,
விசையுடன் கலைத்திடும் உறக்கம்!


தொலைவில் உணர்தல் உண்மையாமோ?
தொலைந்திடும் மனங்களின்,
தொடர் வினை நிகழ்ச்சியில்,
தொலைவேதும் இல்லை!
காலம் ஏதும் இல்லை!


உணர்ந்திடும் நிலையும் உண்மையே!
உணர்ந்து, கலந்திடும் நிலையும் மெய்மையே!
வாய்த்திடும் அனுபவம்,
வாழ்வியல் மெய்மையே!

No comments: