Friday, March 9, 2007

வரலாறு...

"வெள்ள நிவாரணம் பெற
விடிவதற்கு முன்,
முண்டியடித்து,
இடம் பிடிக்க,
சென்ற மக்கள்,
நெரிசலில் வரிசையாய்,
எழுவர் மிதிபட்டு மாண்டனர்"- செய்தி.


மீண்டும் மழை, வெள்ளம்,
நிவாரணம் வேண்டி,
இரவில் இடம் பிடிக்க,
இங்கும் அங்கும் கூடிய கூட்டம்,
இழுத்து தள்ளி,
வரிசையில் நிற்க,


டோக்கன் வாங்க,
அடுத்தவரை தள்ளி,
மிதித்து, துவைத்து,
முன்னேறிய கூட்டம்,
பலி வாங்கி பழி தீர்த்தது 42 பேரை,


நிவாரணம் கிடைத்தால் போதும்!
நிலவரம் இப்படி!!

No comments: