Wednesday, March 28, 2007

அச்சம் தவிர்..!

அச்சம் தவிர்!
ஆண்டுகள் பல வாழ்ந்து என்ன பயன்,அச்சத்துடன்."அஞ்சுவது அஞ்சாமை பேதமை". அஞ்சுவது என்பது யாது?என்ன அதற்கு வரையறை.வள்ளுவர் காலத்து "அஞ்சுவது", மன்னனைக் கண்டு,மன்னனின் சட்டங்களைக் கண்டு. தற்போது,ஆட்சியின், திரைமறைவு அநியாயங்கள், அதிகாரங்கள். 'தடா','என்.ஸ்.ஏ','எஸ்மா','குண்டர் சட்டம்' போன்ற பல புதிய சட்ட வரிசைகள். வளர்ச்சி, முன்னேற்றம் எனும் பெயரில் நிகழ்த்தப்படும் "வளர்ச்சி பயங்கரவாதம்", ஆகிய பல பரிமாண நிரல்களைக் கண்டு.


காலம் உருண்டோடியிருப்பினும், இன்றும் அச்சம் என்பது, நிலவும் சமூகத்தின், விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை மதித்து நடப்பது என்பதாகத்தான் உள்ளது. "அச்சமில்லை,அச்சமில்லை", பாரதி தமக்குத் தாமே தற்கருத்தேற்றம் செய்து கொண்டார். அவருக்கும் தெரிந்திருந்தது, ஆங்கிலேய அடக்கு முறை வடிவங்களைப் பற்றி.


அவற்றை எதிர்கொள்ளும் அஞ்சாமையை ஒரு இயக்கமாக,தேசிய கீதமாக,தெம்பு அளிக்கும் உணர்வாக, அனைவருக்கும் அவரால் தர முடிந்தது. அதுபோன்று, 'ஒலியல்'(டானிக்) அளிக்கும் கவிஞர், இயக்க முயற்சியுடன் இணைந்து செயல்படுவர், 'வெல்ல முடியாத எண்ணிக்கையில்' இன்று தேவை!

No comments: