உத்தரப் பிரதேசத்தில் மூளைக்காய்ச்சல்!
பெரியவர் முதல், சிறியவர் வரை,
நூற்றுக்கும் மேற்பட்டவர் இறப்பு!
ஈடு செய்ய முடியாத இழப்பு!
உயரிய, சிறந்த மருத்துவ மனைகள்
இருந்தும்,
மக்களுக்கு இல்லை!
நல வழியில் முன்னேற்றம்,
இதுதானா?
மாநிலந்தோறும் மடிகின்றன,
குழந்தைகள், நோய்களால்.
மருந்துக்கும், தடுப்புக்கும் வழியில்லை!
தேசியக் கொடியின்,
கவுரவத்தை இழக்கமாட்டோம்!
சட்டம் வந்து விட்டது!
நோய்களால் சாவதற்கு
தடையில்லை!
தாராளவாதம்!!
No comments:
Post a Comment