சொல்வதை புரிந்து கொள்ள மறுக்கும்,
சோம்பேறி உள்ளம்!
உள்ளதை வெளிப்படுத்த மறுக்கும்,
உதவாக்கரை மனம்!
மறுப்பதினால் மகிழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினால் இகழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினாலும், மறுப்பதினாலும்,
வெற்றி உனக்கா?
எண்ணிப்பார் ஏமாளியே!
எதிர்காலம் இருண்டு போகும்!
No comments:
Post a Comment