Friday, March 9, 2007

எண்ணிப்பார்!

சொல்வதை புரிந்து கொள்ள மறுக்கும்,
சோம்பேறி உள்ளம்!
உள்ளதை வெளிப்படுத்த மறுக்கும்,
உதவாக்கரை மனம்!


மறுப்பதினால் மகிழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினால் இகழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினாலும், மறுப்பதினாலும்,
வெற்றி உனக்கா?


எண்ணிப்பார் ஏமாளியே!
எதிர்காலம் இருண்டு போகும்!

No comments: