Sunday, March 11, 2007

பாதாள சாக்கடை!

பாதையெங்கும் கசிந்தது,
பல நாளாக.
கண்டு கொள்ளவில்லை
எவரும்!


காரும், வண்டியும்,
பேருந்தும்,வாகனங்களும்,
விரைந்து கொண்டிருந்தன!
போவதும்!வருவதுமாக!


வாசனை ஊற்றினை,
வாரி இறைத்து,
பன்னீர் தெளித்து.
வாகனங்கள்,மனிதர்கள்,
ஊடாக கடந்தனர்.


கடமையை நினைத்து!
கண்டு கொள்ளவில்லை!
கோபம்,கொப்பளித்தது!
கழிவுகள்,வென்னீர் ஊற்றாக,
பாதையில் தடுப்பு!


தன்னிலை மறந்த,
ஓட்டிகள் யாவரும்,
என்ன இது?
என்ன ஆயிற்று?
உணர்வு பெற்றனர்!!

No comments: