Saturday, March 17, 2007

"வருந்துகிறோம்"!

சத்துக் குறைவால்
செத்து மடியும் குழந்தைகள்,
ஓர் அகவைக்குள், மகாராட்டிரத்தில்.


மலைவாழ் மகவுகள்,
நீதி மன்றம் சென்ற வழக்கில்,
வந்த செய்தி.


நீயும், நானும், மறந்த சேதி.
"ஆண்டவனும்", "ஆள்பவனும்"
அறியா சேதி.


உழைக்கும் மக்களின்
பிழைப்புச் செல்வம்,
உலகை விட்டு உலர்ந்த சேதி.


சில நாட்கள் நாளேட்டில்,
சின்னத் திரையில், பெட்டிச் செய்தி,
பேட்டி, வாதம், எதிர்வாதம்,
வாக்குறுதி வரிசைப் பட்டியல்.


'தடங்கலுக்கு' வருந்துகிறோம்!

No comments: