Wednesday, March 28, 2007

மக்கள் எச்சரிக்கை!

விடுதலைக்குப் பின்,
புதுவை கண்டதில்லை,
இப்படியொரு மக்கள் எழுச்சி,
கட்சி அரசியலும்,
சங்க அரசியலும்,
பின் தொடர,
முன்னோடி போராட்டம்!


மீன்பிடித் துறைமுகத்தில்,
ஏமாற்றப்பட்ட மக்கள்,
விழித்துக் கொண்டனர்.
ஆழ்கடல் துறைமுக,
விரிவாக்கத்தில்!


40 ஏக்கர் போனது.
400 ஏக்கரும் போக,
அரசு "புரிதல் உணர்வு",
திரை மறைவில்.
இருட்டறை நாடகம்,
வெளிச்சம்!


அந்நியரும், ஆண்டவரும்,
தோற்பர் சுதேசிகளிடம்.
விடுதலை வேள்விக்குச்
சொந்தக்காரர்,
விட்டில் பூச்சி மக்கள்,
என்ற நக்கல்,
இன்று சிக்கல் ஆனாது!


பெண்ணும், ஆணும்,
சாலை அடைத்து,
கூட்டமாக, ஊட்டமாக,
உயர்த்திக் குரல் எழுப்பி,
பதாகை சுமந்து,
பழைய பேருந்து நிலையத்தில்,
ஊர்வலம்!


ஐய்யாயிரம் பேர்,
அணி அணியாய்,
இயக்கங்களுடன்,
முழக்கங்கள் இணைத்து,
கோரிக்கை அட்டைகளுடன்,
ஆர்ப்பரித்து, பரணி பாடினர்!


நீரைக் காப்போம்!
மண்ணைக் காப்போம்!
மக்களைக் காப்போம்!
புதுவையைக் காப்போம்!


உணவுப் பங்கீட்டு,
அட்டை நகல்கள்,
சட்டை செய்யாமல்,
எரியூட்டினர், போலி அரசு,
கவுரவத்தையும் சேர்த்து.
சரித்திரம் படைத்தனர்.


போராட்டங்களின் வரிசையில்,
இணைத்துக் கொண்டனர்,
எதிர்ப்புணர்வை, வெறுப்புணர்வை,
அலட்சியம் செய்தால்,
இனிமேல்,
இல்லது போகும்,
அதிகாரம், ஆட்சி,
எச்சரிக்கை செய்தார்!!

No comments: