Saturday, April 14, 2007

1995ல் தேங்காய்த்திட்டு ஆறு...

எலிப்புழுக்கை விரவியது போல்,
எங்கும் சிதறிக்கிடக்கும்
சங்குகள்,
ஆற்றங்கரையில்.
இடையிடையே ஆலிகள்.


காற்றடிப்பினில்,
காணாமல்,
கரையில் சேரும்,
சிறு அலை நுரைகள்.


"அடுத்த கரையில்
கரைத்த சோப்பின் விளைவு,
இக்கரையில்",
சிறுவர்களின் சிந்தனை.


ஆம், சிறாரின் கற்பனை!
"வானல் சட்டி வடிவத்தில்,
ஆழம் உள்ள ஆறாம்",
"ஆனால், சற்று தொலைவினில்,
பானையைப் போல்,
வெடுக்கென்று,
இழுத்துக் கொள்ளும்,
பள்ளமும் இருக்குதாம்"


இவையெல்லாம்,
மீன்பிடித் துறைமுகம்,
ஆக்கியவுடன்.


கையகப்படுத்தப்பட்ட
நிலத்தில்,
வயல்கள் மாறி,
பச்சை நிறம் மாறி,
செம்மண் பரப்பு,
செந்நிறம் வாழ்கிறது.


கட்டிடங்கள் வரும்,
கார்கள் வரும்,
லாரிகள் ,டிராக்டர்கள்,
இவைகளுடன்,
கார்பன்டைஆக்சையுடு',
'மோனாக்சையுடு'
எல்லாம்.


கரை ஓரத்தில்,
தொகுப்பாக நின்ற தென்னைகள்,
தலையிழந்து, நிலைவீழ்ந்து,
தனிக் குடும்பமாய்.


மண் அரிப்பும்,
மாறியுள்ள,
பூகோள விதிகளாய்.
இவைகளுக்கு இடையில்,
கட்டுமரங்கள் விடுகிறார்,
மாலை ஆறு மணிவரைக்கும்.


வலையில் என்ன கிடைக்கும்,
"குசுமாம் பொடிகள்,
குண்டியை நனைக்குமா"?

No comments: