Friday, April 13, 2007

நரை..

என் சூரி கூறுகிறாள். "இந்த தாத்தாமுடி, உனக்கு வேண்டாம்பா". அவளுக்கு பிடிக்கலையாம். ஆம்! வயதாவது அவளுக்கு பிடிக்கலை! எனக்கு மட்டும் என்ன! முதுமை பயணத்தை ஒத்திவைக்க எவரால் முடியும்!.

ஓர் உண்மை அவள் மழலையில் வெளிப்பட்டது. மரபியல் ரீதியில் எனக்கு வாய்த்தது, என் அப்பா எனக்கு அளித்த "வாரிசு உரிமை". அதை எப்படி நான் மறுக்க முடியும்! அவர் எனக்கு எழுதிவிட்டு சென்ற சொத்துரிமை அல்லவா!

குழந்தைகள் பேச்சில், நல்ல ஆழமான புலன் அறிதல். நம்மில் பலருக்கு புரிவதில்லை, பல நேரங்களில்...

No comments: