கொடுக்கைச் சுழற்றி,
கண்களை நிறுத்தி,
அரவம் கேட்டு,
கொடுக்கை முன்நிறுத்தி,
வலைக்குள்,
வெடுக்கென செல்லும் நண்டே!
ஆற்றங்கரையில்,
பூ தெளித்தது போல்,
ஆமணக்கு கொட்டை நிறத்திலே,
புள்ளிகள்,
முதுகில் தெளித்தது போல்.
ஆட்டம் போடும் நீங்கள்,
கொடுத்து வைத்தவர்கள்.
சொந்தமாக ஆளுக்கொரு,
வலையாவது உண்டு,
உங்களுக்கு!
எங்களுக்கு ???
No comments:
Post a Comment