Tuesday, April 17, 2007

தாராளம்...?

நீர் நிலைகளை காக்க!
நீங்கள் மட்டுமா?
கரசூர், சேதாராப்பட்டு,
மக்கள் கேட்கிறார்!


சிறப்பு உங்களுக்கு!
மண்டலம் உங்களுக்கு!
இறப்பு, இழிவு,
"கமண்டலம்", எங்களுக்கா?


ஊரைச்சுற்றி மதில் சுவர்!
அடையாள அட்டை!
ஒரு வழிப்பாதை!
ஒடுங்கிச் செல்லவேண்டும்!
நடுங்கிச் செல்லவேண்டும்!


ஏரி என்ன ஆவது?
ஊசுட்டேரி நீர் பிடிப்பு பகுதி?
ஊசுட்டேரிக்கு உலை வைத்து,
வேலை நடக்க,
உங்களுக்கு கவலை வேண்டாம்!


மனை பிரிக்கலாம்!
மாடி கட்டலாம்!
ஓட்டல், உல்லாசம்!
ஓரிரண்டு கூடுதல் சாலைகள்!
கன ரக வாகனங்கள்!
கழிக்கப்படும் பொருட்கள்!
மண்டலத்தில் குவிக்கப்படும்!
மக்கள் "அனுபவிக்க"!


வயல் இல்லாமல்,
போயின் என்ன?
தென்னந்தோப்பு காணமல்,
போனால் என்ன?
சுண்ணாம்புச் சுரங்கங்கள்,
மழை நீரைத்தேக்கி,
வைத்தால் என்ன?


வியாபாரத் தண்ணீர்,
இருக்கவே இருக்கு,
உங்களுக்கும், எங்களுக்கும்.
சோறுக்கு கவலை இல்லை,
பயிறுக்கு கவலை இல்லை,
இறக்குமதி,
இருக்கவே இருக்கு.


உள் நாட்டில் இல்லையாயின்,
வெளி நாட்டில் கூடவா இல்லை!
இறக்குமதி வணிகம்,
தாராளம்,
தடை இல்லை!

No comments: