Sunday, May 20, 2007

மேதா பட்கர் வந்தார்!

மேதா பட்கர் வந்தார்,

மேன்மை நமக்கு தந்தார்,

நர்மதை அணை எதிர்ப்பு,

நாடு தழுவிய அளவில்

'பெருந் திட்டங்கள்',

மலைவாழ் மக்கள்,

தலித் மக்கள்,

விவசாய மக்கள்,

தொழிலாளர்கள்,

உழைக்கும் மக்கள்,

அனவரையும் அரவணைத்து,

ஆதரித்து,

சமூக இயக்கங்களின்

தேசிய கூட்டணி அமைத்து,

அமைப்பாளராய்

ஓடி, ஆடி உழைத்து

மக்கள் அரசியலை

முன் நிறுத்தி,

மாற்று திட்டங்களை

செயல்படுத்தி,

கிழக்கையும், மேற்கையும்,

தெற்கையும் ,

வடக்கையும் இணைத்து,

அற வழியிலே,

அறையும் மொழியிலே,

உணர்த்த ஒலித்து,

ஓயாத சங்காய்,

உழைக்கும் மக்கள்,

உள் ஒளியாய்,

அடி நாதமாய்,

அடிமை விலங்கு

உடைத்து,

ஆளும் ஆதிக்க வர்க்கத்திற்கு,

சிம்ம சொப்பனமாய்,

சூறைக் காற்றாய்.......