உணவுப் பயிருக்கு வழி மூடி,
பணப்பயிருக்கு வழி வகுத்தோம்,
நீர்த் தேவை அதிகரித்தோம்,
மேல் நீரை மாய்த்தோம்.
வேளாண்மைக்கு விடை கொடுத்தோம்,
சிறு தொழிலுக்கு வழி வகுத்தோம்,
சிறுக, சிறுக அழித்தோம்.
நிலத்தடி நீருக்கு உலை வைத்து,
பெருந் தொழிற்சாலைகளுக்கு
ஊரெங்கும் உற்சவம் வைத்தோம்,
உலா வைத்தோம்.
உழவுத் தொழிலை
இழவுப் பட்டியலில் சேர்த்தோம்.
வளர்ச்சி சாதித்தோம்.
சேவைத் துறை,
தேவைத் துறை ஆக்கினோம்
சேதராப் பட்டையும் சேர்த்து.
கேட்ட பயிர் வளர்த்த நாட்டில்
தோட்டப் பயிர் வைப்போம்
தொட்டிகளை உருவாக்குவோம்.
கஞ்சித் தொட்டிகளுக்கு
கனவான்கள் ஆக்குவோம்
மான்யம் வழங்குவோம்.
இஞ்சி குரங்குகளாக
செஞ்சிமலை உயர்த்துவோம்,
பஞ்சுத் தொழிலை பாழடித்து,
ஏரிகளை ஏப்பம் விட்டு
ஏரி சங்கம் அமைப்போம்,
நீர் பிடிப்புப் பகுதிகளை
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
அளித்து
பனாட்டு எடுப்போம்!
No comments:
Post a Comment