Monday, May 28, 2007

சிவ ஞானம்!

கை கொடுக்க வேண்டியவன்
கொடுக்க வில்லை!
பெற்றான் இரண்டு
பெருமையாய்!
உதறினான்.


பின் சேர்க்கை ஒன்று
பிழைப்புக்கும் வழியில்லை!
பேதையாய்!
போதை மனிதன்,
விட்டு விலகி,
பாதை மாறாமல்.


சொந்தம் வாய்க்கவில்லை!
ஏமாந்தும் பிரியவில்லை!
ஏனோ,
உமக்கு புரியவில்லை!


எனக்கு நானே ஏமாளி!
ஏற்றிச் சென்றார்
எழுதினார்!
ஒப்பமிட்டேன்!


புண்ணியம்,
வாழ்கிறார் வளமனையில்!
வாய்த்த மனை,
வான் வீதியில்! நிலவொளியில்!
சூரிய கூரையில்!


இருண்டகம் உள்ளவர்,
அகம் கொடுப்பாரா?
அருகில் முகம்
கொடுப்பாரா?


முடிந்தது யாவும்,
இந்தியன், பகுத்தறிவாளன்.
உதவுகிறான்
பிரஞ்சுக்காரன்,
உதறியவனுக்கும் சேர்த்து!


உண்மை அறியாய்
உலகியல் இது!
உம்மை ஆளும் ஈசன்,
அவனையும் ஆளும்
நேசன்.


அனைவருக்கும்
இதுவே ஞானம்!

No comments: