வழிப்பாட்டு தலம்
வழிந்தது இரத்தம்
வீழ்ந்தது உடல்கள்.
இறைப் பற்று
உரிமை மீறல்
ஐய்தாராபாத்தில்,
இந்தியாவில்,
மீண்டும் அரங்கேற்றம்.
சுற்றுலா மக்களும்
சுருண்டனர்,
செய்வதறியாது,
அமைதியை குலைத்திட்ட
அருவருப்பு.
மனித மாண்பை
சீரழித்த சிந்தனை,
மார்க்கங்களை
மதித்திடா,
உரிமை மீறல்.
அன்றாடம் காய்ச்சியாய்
பிழைக்கும் மக்கள்,
கல்வி உரிமை
இல்லை,
கஞ்சிக்கும் உறுதி
இல்லை.
கவலை மறக்க
தொழுகை
அழுகை ஆக்கிய
மனசாட்சி,
சகிப்பு எங்கே?
உரிமை பேசும்
மக்கள் தகிப்பு,
இங்கே!
No comments:
Post a Comment