Sunday, June 10, 2007

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு-- வரலாறு-1

படிக்கும் வரலாறு, படிப்பினை வரலாறா?
வரலாற்றில் மறைக்கப்பட்ட உள்ளதுகள் எவ்வளவோ!
ஒரு சான்று,

புதுவையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு உரிமையை 1989 களிலேயே விளக்க இயக்கமாக, பாகூர் கொம்யூன், வில்லியனூர் கொம்யூன், மண்ணாடிப்பேட்டை கொம்யூன், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, காலாப்பட்டு போன்ற பகுதிகளில் மிதிவண்டி பயணமாக மேற்கொண்டு பாடுபட்டு உழைத்தவர்கள் பெரும்பாலும் இம் மண்ணின் மைந்தர்கள்.


செந்தமிழர் இயக்கத் தோழர்கள் முத்துக்கண்ணு, அபிமன்னன், அரிமா வளவன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முண்ணனித் தோழர். காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு இளைஞர் பேரவைத் தோழர் கோ.சுகுமாரன், மார்க்சிய லெனினிய கட்சியின் தோழர் சோ.பாலசுப்ரமணியன், நட்பு குயில்கள் தோழர். சீனுதமிழ்மணி, புதுவை புத்தக நடுவத்தின் தோழர். காலஞ்சென்ற இராமமூர்த்தி, பாகூர்த் தோழர்கள் மஞ்சினி, வேலுமணி போன்றவர்கள்.


தொலைபேசித் துறையின் தோழர்கள் மகேந்திரன், மதியழகன், அன்பழகன், சின்னத்துரை ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள். பேராசிரியர் இளங்கோ, தோழர் இலக்கியன், தோழர். இரவிக்குமார், தோழர். அழகிரி, தோழர். அருணன், தோழர். மாலதி மற்றும் வில்லியனூர் தோழர்கள்.

மிதிவண்டி பயண பிரச்சாரத்தின் முடிவில், துரை முனுசாமி திருமண நிலையத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது. பொதுக்கூட்டம் , கலை நிகழ்ச்சி ஆகியவை செஞ்சிசாலை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர். கண்ணபிரான், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தோழர் பழமலய் மற்றும் அவரது தோழர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். பின்னாளில் ஏம்பலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த திரு. நீலகங்காதரன் போன்றவர்கள் அப்போதைய முற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.