Wednesday, June 13, 2007

கோகிலம் வாழ்க!

கூவி ஓய்கிறாய்
கூட்ட மனிதரிடை
அன்றாடம்
அரிதாய்
உன் குரல்
செவி மடுப்போர்
எவர் உள்ளார்


மாந்தோப்பு
மண்டியிருந்த சாவடி
மண்ணில்
பச்சை பரப்பியிருந்த
நிலம்
உம் புலம்


ஒண்டிக் குடியாய்
ஓயாத நெரிசலில்
ஒலி எழுப்பும்
வாகனங்களுக்கு
இடையில்
கிலியுடன்
வலம் வரும்
வாழ்க்கை


குயில்களின் கோட்டம்
குமிழி ஆன பின்னும்
நம்பிக்கை
உமக்கு அதிகம்


நாளெல்லாம்
உம் இருத்தலை
எம் செவிகளுக்கு
பண்பலையாக
ஓயாமல்
அளிக்கிறாய்


ஒன்றிரண்டு பேராவது
ஒப்பிடுவார்
உள மகிழ்வார்


உணர்வு பெற்ற
மண்ணின் கீதம்
மறந்து விடவில்லை
மறைந்தும் விடவில்லை

No comments: