Sunday, June 17, 2007

காவு கொடுப்போம்!

சொல்லாமல் வளர்த்தனர் அன்று!
சொல்லாமல் ஒழித்தனர் இன்று!
வீட்டிற்குள் இருக்கும் மரத்திற்கு
விடை கொடுப்போம்!


உத்தரத்தில் இருந்தாலும்,
சத்திரத்தில் இருந்தாலும்,
சாய்த்திடுவோம்.


சாவு கொடுப்போம்,
வளர்ச்சிக்கு
காவு கொடுப்போம்,
சடுதியில்.


கற் குவியல்களை கொட்டி,
கருங்கல் தளம் அமைப்போம்,
நெற் குவியல்களை
நெட்டித் தள்ளுவோம்.


கம்பிகளை நம்பி வெம்பி
வாழ்வோம்,
வெப்பம் மிகுதி ஆனால்,
மின் விசிறி, குளிரூட்டி,
குவிமையமாக
கூட்டிற்குள் அமர்ந்திடுவோம்.


குவலயம் சூடானால் என்ன?
கூட்டம் கூட்டமாக,
மனிதர்கள் இறந்தால் என்ன?


வணிகம் எனக்கு,
வசதி எனக்கு,
அசதி போய் விடும்,
ஆயுள் கூடிடும்.

No comments: