Saturday, June 30, 2007

கடமை இல்லையா?

ஆரம்ப பள்ளி கல்வியில், ஐம்பது சதம் மாணவர் தொடரவில்லை கல்வியை, கூறுகிறார் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர். கல்வியில் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம் என அடுக்கடுக்காக சாதனை விளம்பரம் செய்து, 'மார் தட்டி' விழா எடுக்கும் 'மகான்கள்' என்ன கூறுவார்?,' சாதனைத்திலகம்', 'கடவுளின் அவதாரம்', என்ன பதில் தரப்போகிறது? அடித்தள மக்கள் கேட்கிறார்.


மாநிலத்தில், 2000 லிருந்து இதுவரை 2630 பேர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் 14 முதல் 44வரை வயதுள்ளவர்கள் அடக்கம், என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் வளர்ச்சி, முன்னேற்றம், எந்தவகையில் அமைகிறது.


குற்ற நடவடிக்கையில் தண்டனை பெற்றவர்கள் 2003 வரை, 22 வயதுக்கு குறைவானவர்கள் 177 ஆகும். 23 வயதிலிருந்து 40 வயதுக்குள் 337 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ள சூழலில், குற்ற செயலில் ஈடுபடும் இளைஞரை திருத்தும் பொறுப்பு, கடமை, புதுச்சேரி அரசுக்கு இல்லையா? மனித வளத்தை காக்கும், மேம்படுத்தும் கடமை, நிர்வாகத்திற்கு இல்லையா?

No comments: