தீவக நாடு அவர்களுக்கு!
கண்ணீர்த் திவளை எங்களுக்கா?
காலமெல்லாம்.
காலனி ஆதிக்கங்களைக் கடந்து,
மார்க்கங்களின் மாட்சியைக் குலைத்து,
திக்கற்று,
திவளையும் வறண்டு,
தீவிர வாதத்தின் கிடிக்கிப் பிடியில்
நொடி நொடியாய்,
அணு அணுவாய் அல்லல்,
அலைக்கழிப்பு,
சொந்த மண்ணில் சோகங்களாய்
புலம் இழந்து,
புலம்பித் திரிந்து ,
வளம் இழந்து,
வாழ்க்கை இழந்த
தொல்குடி!
தோற்கும் குடி!
No comments:
Post a Comment