கேட்டேன் அவரை
கேட்கிறதா?
எங்கே?
விழவில்லை எனக்கு.
விழுகின்ற விழிப்பு
விழைவு
இவருக்கு இல்லை!
ஏன் எவருக்கும்!
சந்தடி உலகில்
வந்தடி தெரியவில்லை,
விழவில்லை.
வாயிலும் புரியவில்லை!
இரைச்சல், புகைச்சல்,
'டர், புர்',
'உயிங்', 'குர், டர்',
பழகிய எனக்கு
மெல்லோசை,
பண்ணோசை,
தன்னோசை,
ஏதும் எட்டாது.
ஏமாற்றத்தை
தவிர,
பொறிகள் பொலிவு,
வலிவு,
இழப்பு,
புரியவில்லை.
மெல்ல சாகும்,
ஆற்றல் அடங்கும்,
அணு அணுவாய்.
'அலோபதி'யும் உதவா,
எந்த பதியும்.
No comments:
Post a Comment