பூங்கா, பாரதியின் பெயர் இதற்கும். 'கா' என்றால் சோலை. அடர்த்தியான மரங்கள், செடிகள், தாவரங்கள், புல், பூண்டுகள் அமையப் பெற்ற நிழல் தரும், குளிர்ந்த சூழல். சீர் செய்கிறோம் என்று இடைவெளி அதிகப்படுத்தி, செயற்கைத் தரைகள் அமைத்து, கணக்குக்காக கவின் மிகு லபூர்தொனெ-பிரஞ்சு கவர்னர், அமைத்த பூங்கா.
' வளர்ச்சி', 'அழகுபடுத்துதல்' கோடிக்கணக்கில்.' இயற்கை சூறையில்' அத்தனை சூதும் அம்பலம். 'மக்கள் வரிப்பணம்'. 'திட்டமிட்டு ஏப்பம் விடும் அதிகாரம். அக்கறையற்ற சமூகம். இது ஒரு துளி. ஓராயிரம் நடக்கிறது நாள்தோறும். கேரளா போன்ற மாநிலத்தில், இது போன்ற முறைகேடுகள் நடக்க விடுவார்களா?
விழிப்புணர்வுக்கு கூட, வீதி இயக்கம் தேவையா? அரசியல் கட்சிகள் கவனம் எங்கே? மக்கள் கேட்கிறார்கள்!!
No comments:
Post a Comment