Sunday, July 22, 2007

சென்னை கருத்தரங்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.


கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலும், அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து 'போர் முரசம், அடிப்பது போல் முழங்கினர்.எவ்வித அரசியல் கருத்துக்களையும் பேசுவதற்கு, எழுதுவதற்கு இந்திய அரசியல் சட்டம் உரிமை அளித்துள்ளது. ஆயுதபாணி அரசியலை, சட்டங்கள் ஏற்கவில்லை.



என்றாலும், இவ்வகை அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் மீது, அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது, இந்திய தண்டணைச் சட்டம் விதித்துள்ள முறைகளுக்கு முரணாக, மீறலாக அமைகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்துவது என்பது குறித்து, பல உயர் நீதி மன்றங்கள், உச்ச நீதி மன்றமும், பல வழக்குகளில் கண்டிப்புடன் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு குறித்து, தெளிவாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளது.



காவல் துறையானாலும், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை காலில் போட்டு மிதிப்பது, குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை மீறுவது, எப்படி சரியானது ஆகும். 'சட்டத்தின் ஆட்சியை' அப்பட்டமாக மீறுவது, எந்த வகையில், 'சீருடைக்கு' ஒழுங்காகும்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அதிகாரம் எவர் கொடுத்தார்? சனநாயகத்தை மதிக்கும் மக்கள் கேட்கிறார்.

'தற்பாதுகாப்பு' உரிமை என்பது ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவரை 'முடித்துவிடுவது', என்கின்ற நோக்கத்தில், நடுநிலைமை இன்றி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் கொலைக் குற்றம் ஆகும் என்பது வெளிப்படை. இருந்தாலும், நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் செல்லும் வசதி பாதிக்கப்படும் மக்கள் பிரிவினரால் சாத்தியமா?

துப்பாக்கி, அல்லது ஆயுதம் ஏந்தாத, 'உடனடியாக ஆபத்து விளைவிக்கக்கூடிய திறன் இல்லாத', கருத்து ரீதியாக செயல்படும் அரசியல்காரர்கள் மீது, நவீன ஆயுதம் போன்ற கருவிகளை உபயோகிப்பது சமமற்ற அதிகார மீறலாகும்.

தற்போது, சமூக தணிக்கை போன்ற கருத்து ம்க்களிடையே வலுவூக்கம் பெற்று வரும் சூழலில், சீனா போன்ற நாடுகளில் 'சமூகத்திற்கான காவல்' எனும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், ஆங்கிலேயர் உருவாக்கித் தந்த காவல் துறை சட்டம் இன்றும் அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ளது சரியானது ஆகுமா?

No comments: