நெடுங்குன்றமென விண்ணுயர்ந்து செம்மாந்து நின்ற மரங்களை பதம் பார்த்து, முரித்து,விளைநிலங்களின் பச்சை மென் பயிர்கள் மீது வன்மம் காட்டி சென்றடங்கியது அமைதியாக, புயல்! வான் மின்னலின் எச்ச சிதறல்களாக வண்ணம் காட்டியது தாரகை விண்ணில்!
ஆனால், தற்போது இயற்கையின் சீற்றம் எப்போதும் நிகழாதது போல், இயல்பான அமைதி, அனைத்து இடங்களிலும் மேலோங்கி நிலவுகிறது!
வைகறைப்பொழுதில் தலைவனும், தலைவியும் நின்றனர் வயல்வெளியின் நடுவில்!!
சூறாவளியின் தாக்கத்தில், காயம்பட்ட இயற்கை எழிலின் நொடிப்பு குறித்து, மனதில் அசைபோட்டு நின்றார்! சில நொடிகள், ஆழ்ந்த இதம் அளிக்கும் அமைதியில்!
படை வீரன் கிழக்கு நோக்கினான்! தன் நெஞ்சிற்கினியாளிடம்," இருளைக்கிழித்து வெளிப்படும் ஞாயிற்றைப்பார்" என்று கூறினான்.
கலில் சிப்ரான்
தமிழ் வடிவம்-முத்துக்கண்ணு
No comments:
Post a Comment