Thursday, July 12, 2007

விடைதருமா?

ஆற்றில் ''லாரிகள்''
அலை அலையாக
அள்ளும்,
'அல்லும் பகலும்'
ஆழப்படுத்தும்,
காயத்தை.


"குருதியென நீர் பிடிப்பும்''
படிப்படியாக வற்ற,
சோகை,
"எம்மிடம் தங்க''
''தொகை உம்மிடம் தேங்க''


"ஆற்றல் மறவர்"
தேறினார்,
அதிகாரத்தில்,
அலங்காரத்தில்,


" மேட்டுப்பகுதி மட்டும்
மட்டமா"
" வெட்டி வீழ்த்துகின்றனர்"
''செம்மண் உடல்"
"சிதைந்து பாதாளமாக"

No comments: