Friday, August 31, 2007

குர்சார் இன மக்கள் மீது காவல்துறை அத்துமீறல்- 2

31,மேல் பொலி கிராமத்தில், பிற்பகல் ஒரு மணி அளவில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், இலவச மதிய உணவிற்காக சென்று கொன்டிருந்தபோது காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டனர். சூன் 2,ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், காவல் துறை 96 சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்று மட்டும் உள்ளது, 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிக்கப்படவில்லை. ஆனால், 31ந் தேதி இரவே, அவசர அவசரமாக மருத்துவ மனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, நள்ளிரவிலேயே உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன.



கொல்லப்பட்ட அனைத்து உடல்களிலும், துப்பாக்கி குண்டு காயங்கள் 3 அடியிலிருந்து 4அடி ஆழத்திற்கு, வயிற்று பகுதியின் பக்க வாட்டில் இருந்தன. இந்த மூன்று சம்பவங்களிலும், குறைந்த அளவு பாதிப்புகள் ஏற்படும் வண்ணம் காவல் துறை முயற்சிகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயம் அடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. சாலை ஓரங்களில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் இதரர், தாங்களாகவே மருத்துவ உதவியை நாடிச்செல்ல வேண்டிய துயரம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் குறித்த விவரம் மாநில அரசு நிர்வாகத்தால், இன்றுவரையிலும் அளிக்கப்படவில்லை.



கிடைக்கக் கூடிய ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, காவல் துறையினரின் தகவல் ஒத்திசைவாக இல்லை. பட்டோலி-பேப்பல் கேரா பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமலே துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. தெற்குதிசை நோக்கி 200 கச நீளத்திற்கு இரத்த தொய்வை உண்மை அறியும் குழு காண முடிந்தது.

2 comments:

அசுரன் said...

Thanks for publishing this here.

Asuran

முத்துக்கண்ணு said...

தோழருக்கு வணக்கம்!

மேலும் இது குறித்த செய்திகள் இடுகையில் வரும்

முத்துக்கண்ணு