Wednesday, September 12, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-2

பெரும்பாலும், சித்ரவதை என்பது பஞ்சாப்பில் குற்ற வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்கும் ஒரு வழியாக, புலன் ஆய்வு ஏதும் செய்யாமல், ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது வழக்கின் தகவல் பெற பயன்படுத்தப் பட்டு வருகிறது.

காவல் துறையின் வதை, தற்போது அதிகரித்து உள்ளது. காவல் துறைக்கு புலன் ஆய்வு செய்யக் கூடிய திறமை இல்லாததின் காரணமும், போதிய வளங்கள் இல்லாததின் காரணமும் ஆகும். குறிப்பாக போதிய நிதி ஒதுக்கீடு இன்மை, உட் கட்டமைப்புக்கு அதிக முதலீடு இல்லாதது, பயிற்சி அளிக்காமை, ஆராய்ச்சி இன்மை, நவீனமயப் படுத்தாமை, பொறுப்பற்ற போக்கு ஆகியவை இதர காரணங்கள் ஆகும்.

சட்டத்திற்கு புறம்பான கைது சமயங்களில், அதிக அளவில் வதை செய்வது நிகழ்கிறது. இச் சமயங்களில் காவலில் இருப்பதை துறை உறுதி செய்வதில்லை. நீதி மன்ற ஆய்வும் இச்சூழலில் மேற்கொள்ளப் படுவதில்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, தனிப்பட்ட எதிரிகளுக்கு பாடம் புகட்டவும், தொழில் சார்ந்த நண்பர்களுக்கு சகாயம் செய்திடவும், பணம் பறித்திடவும் பயன்படுகிறது.

போதைப் பொருட்கள் கையாள்வது தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம், ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்படும் நிலைமைகளில், பெரும்பாலும் காவல் துறை, இச் சட்டங்களை மிகவும் தவறாக பயன்படுத்தி, சந்தேகப்படும் நபர்களை, மிக நெடிய காவலில் வைத்து, அடிக்கடி துன்புறுத்தி வருகிறது.

காவல் துறையில் பணி நியமனம், பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் பணம் அல்லது இதர பரிவர்த்தனைகள் மூலம் நிகழ்கிறது என்று செய்தி ஊடகங்கள், சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனவே, அதிகாரிகள் பெரும்பாலும், செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களுக்கு சலுகைகள் அல்லது தாம் செலுத்திய லஞ்சத்தை அதிக அளவில் திருப்பி அதிகமாக கேட்டு பெறுகிறார்கள். (சர்வதேச பொது மன்னிப்பு கழகத்தின் அறிக்கை சனவரி 2003)

வதையின் வகைகள்:
************************
* உதைப்பது, தடிகளால் அடிப்பது, தோல் பட்டைகளால் புடைப்பது போன்றவைகளை உள்ளடக்கியது . தலைகளை தொங்க வைத்து, கைகளை பின் பக்கம் வழக்கமாக கட்டி தொங்க விடுவதும் ஆகும்.

*மின்சார அதிர்வுகளை பிறப்பு உறுப்புகளில் செலுத்துவது. இதர மென்மையான உடல் உறுப்புகளில், குறிப்பாக காது பகுதிகள் மற்றும் விரல்களில் மின்சார அதிர்வு அளிப்பதும் ஆகும்.

*உருளைகளை, மர உருளைகள் அல்லது இரும்பு உருளைகளை, பல காவல் துறை அதிகாரிகள் தம் எடை முழுவதும் உருளைகள் மீது ஏற்படும் வண்ணம், காவலில் உள்ளவர்களின் கால்களின் மீது, தசை நார்கள் நசுங்கும் அளவிற்கு துன்புறுத்துவார்கள்.சிறு நீரகக் கோளாறுகள் உண்டாக்கும் விதமாகவும் வதை அமையும்.

* உள்ளங் கால்களில் அடிப்பது, பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவது, அல்லது வெந்நீரை ஊற்றுவது, குதத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவுவது. கண்களில் மிளகாய் தேய்ப்பது போன்றவைகளும் ஆகும்.

*வதையின் விளைவாக, காவலில் உள்ளவர்களுக்கு, உடல் ரீதியாக பெரிய பாதிப்பும், ஆழ்ந்த மன அழுத்த நோய்களும், உறக்கமின்மை மற்றும் பயங்கர கனவு நோய்களும் ஏற்படுகிறது.

No comments: