Sunday, September 2, 2007

குர்சார் இனப் போராட்டம் - 4

3. காவல் துறைக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி பிரயோகம், படொலி-பிப்பல் கேரா பகுதியில், 28 மாலையில் இருந்து நிகழ்த்தப்பட்டு, போராட்டத்தை தடுப்பதை விட போராட்டத்தை தூண்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது நடவடிக்கை எடுக்காதது.

4. 144 தடை உத்தரவை மீறியதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல், குறைந்த எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தம், பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரண்ட போது, மூர்க்கத்தனமாக பலப் பிரயோகத்தை காவல்துறை கையாண்டது.

5. மக்கள் கூட்டத்தை கலைப்பதை விட, காவல்துறையின் மெத்தன போக்கு, நீண்ட நேர சாலை மறியலுக்கு வழி வகுத்தது. மேலும், பெரிய அளவிலான உயிர் இழப்பிற்கும் காரணமாக அமைந்தது. மக்கள் பிரிவினருக்கிடையில், தீராத பகைமைக்கும், வழி வகுத்தது.

6. வெகுதிரள் மக்களின் எதிர்ப்புப் போராட்டம், வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டது. அரசாங்கம், தனது பொறுப்பினை தட்டிக்கழித்து, மக்கள் பிரிவினரின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக செயல்பட்டது. இப்படிப்பட்ட அரசின் நடவடிகையானது, ஒரு திட்டமிட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றமாகவே, நீதிக்கு முரனாண செயல்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது.

7. சமூகங்களுக்கு இடையில், தலைமுறை காலமாக பதட்டத்தையும் மோதல்களையும், அரசாங்கங்கள் தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளன. எடுத்துக் காட்டாக, படோலி-பிபால்கேரா பகுதியில், குர்சார் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் செல்வதை, மூத்த அரசாங்க அதிகாரிகள் துணையுடன், மீனா சமூகத்தினர் முக்கிய நான்கு வழிகளில் மறித்து, தடுத்தனர். இத்தகைய சாலை மறியலில், 144 தடை உத்தரவு பயன்படுத்தப் படவில்லை, காவல் துறையினரின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. பமன்வாசு, சவாய் மதோபூர் பகுதியில், காவல் துறை மற்றும் உட்கோட்ட நீதிபதி ஆகியோர் அளித்த, பொய்யான புலனாய்வு தகவல் அடிப்படையில், குர்சார் சமூகத்தினரை தாக்க தூண்டிய செயலை ,உரிய நேரத்தில் மீனா சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, பெரும் மோதலை தவிர்த்தனர்.

9. கட்டா, லால்சோட் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியலில், காவல் துறையினர் மீனா சமூகத்தினருடன் உறவு வைத்துக்கொண்டு, குர்சார் இனத்தினரின் மீது தாக்குதல் நடத்த வகை செய்தனர். தொடக்கத்தில் 150 குர்சார் இனத்தினர் மட்டுமே அமைதியாக சாலைமறியலுக்கு மே 30ந் தேதியிலிருந்து ஏற்பாடு செய்து வந்தனர்.

10. மொளனியாக காவல்துறை, நான்கு பேர் இறப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமில்லாமல், அருகில் இருந்த கிராமங்களில் உடமைகள் கொள்ளை போவதற்கும், அழிவதற்கும் காரணமாக இருந்தது. தாக்குதலுக்கு பின்னரும், காவல்துறை விசாரணை ஏதும் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எவரையும் குறிப்பிடவில்லை. குர்சார் வாழும் பகுதிகளில் அச்சம், பீதி இன்றும் நிலவி வருகிறது.

11. வசுந்தரா ராசே மற்றும் கர்னல் பயின்சால ஆகியோர், சூன் 4 ந்தேதி மாலையில், அளித்த அறிக்கையின் அடிப்படையில், சாலை மறியல் பல இடங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொது சொத்துக்கள் சேதம், அழிப்பு ஆகியவையும் தடுக்கப்பட்டன. இருப்பினும் மாநில அளவில் ஒரு வார காலம் நிகழ்ந்த அரசு வன்முறை மற்றும் குர்சார் போராட்டம், மீனா சமூகத்தினரின் எதிர் போராட்டம், இராசசுத்தான் கிராமங்களின் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது.

No comments: