Wednesday, September 19, 2007

நெறியாகுமா?

புதுவை அரசு பொது மருத்துவமனையில் ஆகசுடு, 7ஆம் நாள், சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நாள் குறிக்கப்பட்டு அறுவை செய்யப்படாமல், மருத்துவரின் அலட்சியப் போக்கினால், 39 வயது மதிக்கத்தக்க தொழிலாளி அடுத்த நாளே இறந்தார். அவரது உறவினர் இது குறித்து போராட்டம் நடத்தினர். பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களம் இறங்கின. சிறுநீரகத் துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன்- சாவுக்கு காரணமானவர்-மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவர்களின் குழு, புதுவை ஆளுநர் அவர்களை சந்தித்தது. புதுவை முன்னேற்ற காங்கிரசும் சிறுநீரகத்துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன், சாவுக்கு காரணமானவர்,மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு விலக்கிக் கொள்ளப்படது.

அவர் தொடக்கக் காலத்தில் சிநீரகப்பிரிவு தொடங்குவதற்கு காரணமானவர் என்பதற்காகவும் , தனக்கு வேண்டியவர் தன் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தவர் என்பதினாலும், ஒரு ஏழைத் தொழிலாளியின் சாவுக்கு காரணமான செய்கையிலிருந்து அவரை தனிப்பட்ட காரணங்களுக்காக காப்பாற்றுவது தார்மீக நெறியாகுமா?

No comments: