Monday, September 17, 2007

புதுவையின் மருத்துவத்துறையில் பெருகிவரும் சீர் கேடுகள், அரசியல் மயமாக்கப்படும் மருத்துவம்- ஒரு பார்வை

34 வயது மதிக்கத்தக்க ரங்கநாயகி, மூர்த்திக் குப்பத்தைச் சேர்ந்தவர், மீனவப் பெண்மணி, 13, செப்டம்பர், 07ல் வயிற்று வலி, மற்றும் சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஆகிய காரணங்களுக்காக அறுபடைவீடு மருத்துவமனைக் கல்லூரி- தனியார் நிறுவனத்தில்- அனுமதிக்கப்பட்டார்.

நோயாளியின் தங்கைகள் மூவரிடம் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறி இரவு 10 மணி அளவில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஏழை மீனவப் பெண்மணி, எந்த காரணத்தினால் மரணமடைந்தார் என்பதைக் கூறாமல், இறந்தவருக்கு நிவாரணமாக உருவாய் 3 இலட்சம் தருவதாக சமாதானம் கூறியது பலத்த சந்தேகத்தை உண்டாக்க, மருத்துவமனை நிர்வாகம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தின் துணையை நாட , உடலை மருத்துவ ஆய்விற்காக புதுவை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து என்ன செய்வது? அதிகாரம் இல்லாத மக்கள்? அக்கறையற்ற அரசியல்?

பல அமைப்புகள் புதுவையில் இருந்தாலும், உணர்ச்சிகரப் போராட்டங்களை செய்துவிட்டு பத்திரிக்கைச் செய்தியாக, அனைவரும் பேசும் பேச்சாக மட்டுமே நின்று விடுகிறது. அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி, அதனை சீராக எடுதுச் செல்ல வேண்டிய பணிகளில் பாதித்த மக்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது சமூக இயக்கங்களின் , அரசியல் கட்சிகளின் கடமை அல்லவா?

எதிரணியில் உள்ளவர் சரியாக இருக்கும் போது, நாம் சொல்லாளர்களாக மட்டுமே இருந்து கொண்டு, அரசிடம் சமரசம் செய்து கொள்வது உருப்படியாகுமா? உணர்வாகுமா?

உழைக்கும் மக்கள் கேட்கிறார்கள், உங்கள் பதில் என்ன?

No comments: