Friday, September 21, 2007

இராமனுக்கு பலியாகவா?

கருப்பசாமியும், கருகிய இன்னொரு தமிழனும், இந்துத்துவ வெறிக்கு பலி!கன்னட வெறி இன்னும் அடங்கவில்லை! கருத்துக்கு கருத்து பதிலாகுமே ஒழிய, வன்முறை பதிலாகுமா? அரசியல் தலைகளும், தத்து பித்து என உளறல்.

நிகழ்ந்த வன்முறைக்கு பதில் என்ன, தேசியம் கூறவில்லை! மாநிலமும் உருக்குலைந்த தமிழன் வாழ்க்கையை எண்ணவில்லை! வெறிகொண்டு ஓசூர் சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி, வழிமறித்து தமிழ் நாட்டு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை தடிகளால் அடித்து நொறுக்கி, கொளுத்தி, தமிழன் உயிரை எடுத்துள்ளது. இராமனுக்கு பலியாகவா?

படித்தவர்களும் பதில் இல்லை! வீடு தாக்கியது மட்டும்தான் வீதிக்கு வந்துள்ளது. நீதியின் கண்களுக்கு இறந்த தமிழர்களின் துயரம் தெரியவில்லை! சமதர்மம் பேசும் நாடு! மதச்சார்பின்மை பேசும் நாடு!

No comments: