Saturday, September 29, 2007

மருத்துவக் கழிவுகள்?

புதுச்சேரி மாநிலத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவ மனைகள் 'சிப்மேர்' மற்றும் பொது மருத்துவமனை ஆகிய இரண்டு மட்டுமே. இதைத் தவிர, தனியார் 'மருத்துவ வளாகங்கள்', சந்துகளிலும், மூலை முடுக்குகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் 'ஆகாயத் தாமரை' போல 'பசுமையாக, குளுமையாக', வணிகம் கொழிக்கின்றன. புதுவையின் முன்னேற்றத்திற்கு 'இரத்த சாட்சிகள்'!!

11 ஆயிரம் எய்ட்சு நோயாளிகள்- நல்ல மாநிலம்! சிறந்த பகுதி! அனைவருக்கும் மருத்துவம், இலவசமா என கேட்டு விடாதீர்கள்? பணத்தை போட்டவன், 'போண்டியாக முடியுமா'? புரிந்து கொள்ளுங்கள்!!

இவைகள் தினம் தினம் உற்பத்தி செய்யும் மருத்துவக் கழிவுகளை எவ்வாறு கையாள்கின்றன? நடுவண் அரசு இயற்றி உள்ள சுற்றுச்சூழல் சட்டத்தில் குறித்துள்ளவாறு, கழிவுகள் வகைப் படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, ஆழ்ந்த நிலையில் பூமியில் புதைப்பு; 'இன்சினரேட்டர்' எனப்படும் எரியூட்டப்பட்டு அழிப்பது; 'ஆட்டோகிலேவிங்' எனப்படும் சலவை செய்வது; என பல முறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டும் என நிர்ணயிக்கப் பட்டுள்ளதே, அவ்வாறு செய்யப்படுகிறதா? மக்கள் கேட்கின்றனர்?

1 comment:

சதுக்க பூதம் said...

//புதுச்சேரி மாநிலத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. //
My God