Sunday, September 30, 2007

அந்திம அங்கீகாரம்!

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொழுது அழுகிறாய்!!

தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்!
பறித்துக் கொண்டான்!

அந்திம காலத்தில்,
அங்கீகாரம்!
ஏற்றுக் கொண்டாய்!!

கழற்றியதை இறக்குகிறார்,
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!!

ஏக்கத்துடன் தேம்புகிறாய்!
புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப்போல்!!

No comments: