நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா.
மக்கள் நலம் அமைப்பின் தலைமையில் ஏப்ரல்8,2007ல் நந்தி கிராமத்திற்கு சென்றனர் .மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பாக, கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் திபாகர் பட்டச்சார்யாவும் கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளிக்கும் நோக்கத்தில் இக்குழுவினர் அங்கு சென்றனர்.
நந்தி கிராமத்தின் காவல் நிலையத்தில் இருந்து சோனேகூரா கிராமத்தை நோக்கி பயணப்பட்டனர். வழியில் ஏழு சாலைகளில் பள்ளம் பறிக்கப்பட்டு காவல்துறையினர் செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். காவலர்கள் உடையில் சி.பி.எம். கட்சியினர் பல இடங்களில் கற்குவியல்களை போட்டு, விளக்கு கம்பங்களைச் சாய்த்து, மரக்கிளைகளை போட்டு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். உள்ளூர் மக்கள் குழுவினரின் வாகனம் செல்வதற்கு உதவி செய்தனர்.எனினும் மார்க்சிசுட் கட்சியினர் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில், திகிலுடன் இருந்தனர்.
மருத்துவ முகாம் தொடங்கிய பிறகு, சனவரி7ல் பாரத் மொண்டலுடன் கொலை செய்யப்பட்ட பிசுவசித் மெயத்தியின் வீட்டிற்கு குழுவினர் சென்றனர். பிசுவசித்தின் தந்தை, எசு. கே. சலீம், தாய் மற்றும் 7 வயது சகோதரர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பிசுவசித் எவ்வாறு சுட்டு கொல்லப்பட்டார் என்கின்ற விவரத்தைக் கூறினார். 12 வயது நிரம்பிய பிசுவசித் எவ்வாறு சி.பி. எம். கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் சோகத்துடன் விவரித்தனர். பிசுவசித்தின் தந்தையே தீவிரப் பற்றாளார்.தாத்தா ஒன்றுபட்ட கம்யூனிச்ட் இயக்கத்தின் உறுப்பினர்.
அடுத்து பாரத் மோண்டல் வீட்டிற்குச் சென்ற குழு, தந்தை, தாய், மனைவி சகோதரன், இரண்டு மகள் ஆகியோர் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம். குண்டு துளைக்கப்பட்ட காயத்துடன் இருந்த பாரத்தின் சகோதரரை அவரது வீட்டில் பார்த்தனர்.
No comments:
Post a Comment