Sunday, October 28, 2007

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா-2

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவை அளித்திட அரசாங்கம் முன் வந்ததாகவும், பாரத்தைக் கொன்ற அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் பெற மாட்டோம் என மறுத்துவிட்டதாக குடும்பத்தினர் கூறினர். கொலைகாரர்கள் பட்டியலையும் அளித்தனர்.

பாரத்தின் சித்தப்பா மகன், புசுபேண்டு, 14, மார்ச் அன்று கொலை செய்யப்பட்டு, உடல் 5 நாள் தம்லுக் மருத்துவமனை சவக்கிடங்கில் கிடந்தது. பாரத்தின் அத்தை, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, பூட்டப்பட்டக் கிடந்த, அசொகே மோண்டல் என்பவரின் வீட்டையும் காண்பித்தார். தனே சி.பி.எம். மகளிர் பிரிவிற்கு தலைவியாக இருந்தும், கிராமத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்து கேசூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது, 70க்கும் மேற்பட்ட கேசூரி பகுதியைச் சேர்ந்தவர்கள்- சமி ரக்சா சமிதியைச் சேர்ந்தவர்கள்- நந்தி கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறினர்.

நந்தி கிராமம் மற்றும் தம்லுக் மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள் ஆகியோரையும் குழு சந்தித்தது. அதில் காணமல் போன- கணவனை பறி கொடுத்த மனைவிகளும் அடங்குவர்.

கோகுல் நகர், கங்ரா, அதிகரிபாரா கிராமம் அகியவற்றைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பயங்கலந்த பீதியில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். 14, மார்ச் தாகுதலுக்குப்பின், பெரும்பாலோர் குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டனர். ஏராளமான பெண்கள் வெளியே இழுக்கப்பட்டு, கணவன் ,குழந்தைகள் முன்னிலையிலே கற்பழிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தியம் பார்க்கவே அஞ்சினர்.

மற்றொருமுறை எங்கே காவல்துறையும், சி.பி..எம். கட்சியும் கை கோர்த்து தங்களை வதை செய்து விடுவார்களோ எனும் குலை நடுக்கத்தில் , வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கின்றனர். உணவுப்பண்டங்கள், காய்கறிகள் எவையும் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வோரு நாள் மாலையும் குண்டு வெடிப்புச் சம்பவமும், துப்பாக்கிச் சுடும் ஒலியும் கேசூரி பக்கத்தில் இருந்து கேட்டவண்ணம் உள்ளது என்று கூறினார்கள். உண்மையில் முழு அளவிலான தடைகள் , சமி ரக்சா சமிதி ஆதிக்கத்தில் உள்ள கிராமங்களில் நிலவுகிறது.

No comments: