Tuesday, November 6, 2007

எங்கள் தேசம்!!

கருத்து சுதந்திரம் கவலை இல்லை எமக்கு! இந்து மதத்தின் காலாட்படை நாங்கள்! பெரியார் யார்? வால்மீகி இராமாயணத்தில் இராமனைப் பற்றி என்ன எழுதி இருந்தால் என்ன? குடிகாரனோ? எப்படியோ? பண்பாடு அல்லவா?

உண்மையைக் கூற நீங்கள் யார்? கோல் உள்ளவன் இடம் ஆடும் குரங்கு அல்லவா? நீங்கள்! பசித் தீயை அணைத்தோம்! பக்தி தீயை விரைவு படுத்துவோம்! ஒரே பண்பாடு! ஒற்றைக் கலாச்சாரம்! ஓங்கி ஒலிப்போம்!இந்து தேசம்! எங்கள் தேசம்!உங்களுக்கு இடம் இல்லை!

மதச் சார்பற்ற நாடு! சமதர்ம சமுதாயம்! அரசியல் சட்டத்துக்குள் சிறை வைப்போம்! எவன் எழுதிய புத்தகத்தையும் கொளுத்துவோம்! அதை எழுதியவனையும்! எங்கள் மீது சட்டம் பாயுமா! நாங்கள் தான் அதன் மீது!

குசராத்! கோத்ரா யாகம், குண்டம் மறந்து போனதா! கோவை 'சொக்கபானை' மறந்து போச்சா! ஒரிசா பாதிரி தீக்கிரை மறந்து போச்சா! அயோத்தியின் அரங்கேற்றம்! அடுத்தடுத்து ஆசிர்வாதம்! அனைவரும் எம்மிடம்! அணி மாறியிருப்பினும் ஆன்ம இராகம் எங்களுடையதே!

No comments: