Thursday, November 8, 2007

தொடரும் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தின் நந்தி கிராமத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மக்கள்,இதுவரை பல உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். சி.பி.எம் கட்சியினர் தமது மூர்க்க நடவடிக்கையால், காவல் துறையை ஓரம் கட்டி விட்டு, மக்களை உயிர் வதை செய்து வருகின்றனர்.

நேற்று, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய தலைவராகிய தோழர். மேதா பட்கர் அவர்களை நந்தி கிராமத்திற்கு போகும் வழியில் தடுத்து, அவரது தலை மயிரை பிடித்து இழுத்து சேலையப் பற்றி இழுத்தும், அடித்திருக்கின்றனர், மார்க்சிய கட்சியின்," மாண்புறு தொண்டர்கள்".

"விமர்சனம்", "சுய விமர்சனம்", எல்லாம் கட்சி வகுப்பிற்குள்ளே திருப்பிச் சொல்லப்படும் கிளிப் பாடங்களா?

சிவில் உரிமையை மதிக்கும் அனைவரும் இப்போக்கினை எதிர்த்து வலிமையான கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்!

No comments: