Saturday, November 10, 2007

காவல்!

நடமாட முடியலே!
நடுத்தெருவில்!
நாலு மூலை சுமை தாங்கியில்!
நாலு காலும் வலிக்கிறது,
ந(ர)க(ர)த் தெருக்களில்.

மாடி வீட்டிற்குள்
மல்லு கட்ட முடியலே!
குந்தியிருந்த வீடும்,
குட்டிச்சுவரும்,
தெருவோரமும் தோதில்லை!

வலம் வருகிறார்,
'பாசக்கயிற்றுடன்' ,
நேசம் மறந்து.
பக்குவமாய் நகர்ந்தேன்,
படிக் கட்டுகளில் உயர்ந்தேன்!

ஊருக்கே நீர் அளிக்கும்,
தொட்டி,
உயரமானது,
நல்ல நிழல்,
காற்று.

எவர் வருவார்,
அதன் மேலே,
எசமானன் நான்!
எசமானியும் என்னருகே!
நிசமாகவே புது உலகம்!

உங்களுக்கு,
நீர் அளிக்கும்,
காவல் "நாயகன்"

No comments: