Sunday, November 25, 2007

பார்ப்பனத் தன்மை!

பார்ப்பனத் தன்மை என்பது உயர் சாதியினருக்கு மட்டும் சொந்தமான, அவர்களிடையே மட்டும் மண்டி கிடக்கின்ற பண்பு அல்ல? ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில், குறிப்பாக இச் சமூகத்தில் கற்றவர்கள் மத்தியில், அதிலும் சிறப்பாக, அரசு ஊழியத்தில் உள்ளவர்கள் இடையில், மிகவும் செறிவாகவே உள்ளது.

தங்கள் கண் முன்னே நிகழும் நிர்வாக சீர் கேடுகள், பெரிய அளவிலான முறைகேடுகள் ஆகியவற்றிற்கு துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றனர். கேட்டால், " எப்படி எதிர் நீச்சல் போட முடியும்?, போகும் போக்கிலேயே ஒட்டிக் கொள்வதும் அவர்களைக் கட்டிக்கொள்வதுமே உத்தி, நடைமுறைத் தந்திரம்", என பல்வேறு விளக்கங்களை எடுத்து வைக்கிறார்கள்.

அரசியல் சட்டம் அளித்துள்ள ஒதுக்கீடு உரிமை, சரியாக செயல்பட வேண்டும் என்னும் தார்மீகத் துணிவு இன்றி, அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக, கெட்டியாக தன்னை இணைத்துக் கொண்டு தாம் வந்த வழித் தடத்தையும் மறந்து, உயர் சாதியினரோடு உயிர் தொடர்பு கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படும் சமூகத்திற்கே எதிராக, முனைப்புடன் உயர் சாதியினரோடு அவர்களின் போர்வாளாக செயல்படுகின்றனர். பரந்த அளவில் தாக்குதலுக்கும் , பிரிவினை சூழ்ச்சிகளுக்கும் உணர்ந்தே வெளிப்படையாகவே செயல்படுகின்ற போக்கு, தொழிற்சங்க அரங்கிலே மிக அழுத்தமாக நடை பெறுகிறது.

No comments: