Friday, November 30, 2007

உணர்ந்திடுவோம்!

குறை வைக்கா இயற்கை!
கூட்டித்தரும் வளம்!
வான் மழை!
வரையாது வழங்கும்!
கான் உயிர்கள்!
காலம் நீட்டிக்கும்!

ஆறு, சிற்றோடை,
சில்லென்ற காற்று,
பசும்புல் வெளி,
பனித்துளிகள் தெளிப்பு!

படர்ந்த நிலத்திணைகள்,
குடை விரிப்பு!
சமூகம் முழுமைக்கும்,
கடை திறப்பு!

முற்றுரிமை எமக்கே!
முழக்கம்,
அதற்கில்லை!
காப்புரிமை கச்சேரியும்,
அதற்கு இல்லை!

அரண் அமைப்பு,
ஆள் சேர்ப்பு,
அவலம் அதற்கில்லை!
தற்காத்து,
தனி உடமையாக்கும்,
கடமையும் அங்கில்லை!

மடமை விரட்டும்!
மனித கடமை உணர்த்தும்!
அனைவருக்கும்,
பொது ஆற்றல் உணர்த்திடும்!

அறிந்திலோம்!
ஆயிரம், ஆயிரம்
ஆண்டுகளாய்!
அன்னியர் எவரும்
போகவில்லை!

ஆட்சி செய்கிறார்!
அவரவர் உள்ளத்தே!
சுரண்டலும், சுழ்ச்சியும்
உன்னுள்ளிருந்தே
ஆயுதமாய்!

உலகிற்கு
அழிவு அயுதமாய்!
சோதனை!
இரோசிமா, நாகசாகி,
பொக்ரான், செர்னோபில்
இவையனத்தும்
தோற்கும்,
உலைக்களம்!

கதிர் வீச்சாய்!
தடையின்றி,
தேசங்களை கடந்து!
நேசங்களை மறந்து!
நாசங்களை விளைவிக்கும்
நாசகாரிகள்!

உலகமயமாகி நிற்கிறது,
உள்ளொளி இழந்து!
உயிரியல் ஆயுதமாய்!

உணரவேண்டும் இன்று!
உணர்ந்திடுவோம் நன்று!

No comments: