Saturday, December 29, 2007

மோதல் கொலை கலாச்சாரம்- 2

நாட்டில் மோதல் கொலை கலாச்சாரம் மேலோங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காவல்துறை, கொலை நிகழ்த்தும் சீருடையில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணமுடிப்பு,பதக்கம் ஆகிய வெகுமதிகள் அளித்து அவர்கள் கொலை நிகழ்த்த ஊக்கப்படுத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது என்கின்ற போர்வையில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பரிசுப் பொருட்களை அறுவடை செய்து மகிழ்ந்தனர். காவல்துறையின் அத்து மீறல் குறித்து புலன் ஆய்வு இன்றும் நிலுவையில் உள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நிகழ்த்திய பயங்கரம் காவல்துறையின் ஒழுங்கை மட்டுமில்லாது, பொது ஒழுங்கையும் வெகுவாக கெடுத்துள்ளது.

காவல்துறையின் அதிகார மீறல் போக்குகள், அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காவல் மரணங்கள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக காணப்படுவது, இச்சூழலில் ஆச்சரியப்படுவதாக இல்லை!

இரண்டாவதாக, போலி மோதல் சாவுகள் பிரச்சனையில் பாரபட்சமற்ற, நம்பகமான புலனாய்வு செய்வதற்கான துறை ஏற்பாடு முற்றிலும் இல்லை. சரியான விசாரனை இல்லாமல், குற்றம் இழைப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்திடுவது என்பது ,அதிக நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

No comments: