Saturday, December 29, 2007

மோதல் கொலை கலாச்சாரம--3

தேசிய மனித உரிமை ஆணையம் மேற்பார்வை உள்ள அமைப்பாக, குற்றம் இழைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்தாலும், போதுமான மூல வளங்கள் இல்லாததின் காரணமாக, புலனாய்வு செய்யக் கூடிய ஊழியர் பற்றாக்குறை உள்ளதின் காரணமாக, பரிந்துரை செய்யக் கூடிய சட்ட அதிகாரம் மட்டும் உடையதாக விளங்குகிறது.

இதன் விளைவாக, காக்கி உடையில் உள்ளவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நெருக்கடிகள் மற்றும் புற நிலை அமைப்பின் மேற்பார்வையிடல் அதிகார அழுத்தமும் இன்றி, செயல் படுகின்றனர். மேலும் அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவுகள் 132 மற்றும் 197 ன் கீழ் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அரசு அனுமதி பெறுவது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. உடனடியாக நடக்கக் கூடியது இல்லை.எனவே மோதல் பெயரில் கொலைகள் செய்திடும் ,நிகழ்த்திடும் குற்றச்சாட்டுகள் எழும் காவல் துறை அதிகாரிகள, எவ்வித பாதிப்பும் இன்றி, எழுதப்படாத விதி விலக்காக திகழ்கின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி ஒருவேளை கிடைத்தாலும் குற்றம் இழைப்பவரை கூண்டல் ஏற்றி தண்டனை அளிப்பது என்பது ,ஒரு நெடிய பல ஆண்டுகள் நீடிக்கும் நீதி மன்ற போராட்டமாகவும், பெருந்தடையாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும்போது, குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் பல கட்ட பதவி உயர்வுகள், அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.

காலத்தின் தேவை
மோதல் கலாச்சாரத்தை போக்கி, பொறுப்பு கலாச்சாரத்தை காவல் துறையினர் மத்தியில் உருவாக்குவது என்பது பெரு முயற்சி ஆகும். இதற்கு பல முனை அணுகுமுறை தேவைப்படும். மிகப் பெரிய பிரசனை ஆயினும், இதிலிருந்து நம்மால் ஒதுங்கியிருக்க முடியாது.

நமது சனநாயக கொள்கைகளைக் காத்திட வேண்டுமெனில், மோதல் கொலைகள் சட்ட ரீதியான மற்றும் நியாயமான காவல்துறை பணி எனும் சிந்தனப் போக்கு காவல்துறையினர் மத்தியில், அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் பொது மக்கள் மத்தியில் நீடிக்கும் வரையில் மாற்றத்திற்குரிய தடைகள் ஏராளம். கடுமையான துறை விசாரணை அமைப்புகள் உடனடி தேவையாகும்.

காவல்துறை சட்டங்கள மற்றும் காவல்துறை சீர்திருத்தம் தேவை.காவல்துறை குறிப்பேடுகள் தேவை. காவல் துறையினரால் இழைக்கப்படும் குற்றங்களை வகைப்படுத்தி, அதன் தீவிரத்திற்கு ஏற்ப குற்றம் இழைத்த காவல் அதிகாரியின் பதவி நிலைக்கேற்ப, நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகளை, நிர்ணயம் செய்திட வேண்டும்.


No comments: